சென்னை: பாமக சார்பாக கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி பரவி வருவதற்கு,நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் கடலூர், ஆரணி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், ஆகிய ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. இந்த பட்டியலில் இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்டித்து தங்கர் பச்சான் கூறுகையில், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கூறினார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}