பொய்யான செய்தி பரப்புபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.. நடிகர் தங்கர் பச்சான்!

Mar 22, 2024,03:41 PM IST

சென்னை: பாமக சார்பாக கடலூர் தொகுதியில்  தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி பரவி வருவதற்கு,நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.


பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் கடலூர், ஆரணி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், ஆகிய ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. இந்த பட்டியலில்  இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.




இந்த நிலையில் கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்டித்து தங்கர் பச்சான் கூறுகையில், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்