சென்னை: பாமக சார்பாக கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி பரவி வருவதற்கு,நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் கடலூர், ஆரணி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், ஆகிய ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. இந்த பட்டியலில் இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்டித்து தங்கர் பச்சான் கூறுகையில், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கூறினார்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}