மனைவி!

Dec 27, 2025,11:12 AM IST

- ந.தீபலட்சுமி


சில்லென்ற காற்றில் தவழ்ந்து, 

அலை அலையாக வளைந்தும் நெளிந்தும், 

கரு கருவென நீண்ட நெடிய, 

தன் கூந்தலை பின்னி முடித்தாள், 

அவள். 

 

தெளிந்த நீரோடை போன்ற தன் முகத்தில், 

மேடான நெற்றியின் நடுவே, 

செந்தூரத் திலகமிட்டு, 

கண்ணாடியில் தன்னை, 

அளந்தாள்  

அவள். 


 


கல கலவென ஓசையெழுப்ப, 

இரு கைகளிலும் கண்ணாடி 

வளையல்களை  

வாஞ்சையுடன் 

அணிந்தாள் 

அவள். 

 

நேர்த்தியாக உடை அணிந்து, 

நேர் கொண்ட பார்வையில், 

ஜல் ஜல் ஓசையுடன் 

வெளியே வந்தாள் 

அவள். 

 

கூடத்தில் கூடியிருந்தோர்  

அவள் அழகு முகம்  

கண்டு வாய் பிளக்க

அடுத்த நொடி அங்கே 

ஆரம்பமாயிற்று 

ஒப்பாரி! 

 

சிலையாக அமர்ந்திருந்த 

அவள், 

இறந்து போன இந்திய 

சிப்பாயின்  

மனைவி! 


(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்