- ந.தீபலட்சுமி
சில்லென்ற காற்றில் தவழ்ந்து,
அலை அலையாக வளைந்தும் நெளிந்தும்,
கரு கருவென நீண்ட நெடிய,
தன் கூந்தலை பின்னி முடித்தாள்,
அவள்.
தெளிந்த நீரோடை போன்ற தன் முகத்தில்,
மேடான நெற்றியின் நடுவே,
செந்தூரத் திலகமிட்டு,
கண்ணாடியில் தன்னை,
அளந்தாள்
அவள்.

கல கலவென ஓசையெழுப்ப,
இரு கைகளிலும் கண்ணாடி
வளையல்களை
வாஞ்சையுடன்
அணிந்தாள்
அவள்.
நேர்த்தியாக உடை அணிந்து,
நேர் கொண்ட பார்வையில்,
ஜல் ஜல் ஓசையுடன்
வெளியே வந்தாள்
அவள்.
கூடத்தில் கூடியிருந்தோர்
அடுத்த நொடி அங்கே
ஆரம்பமாயிற்று
ஒப்பாரி!
சிலையாக அமர்ந்திருந்த
அவள்,
இறந்து போன இந்திய
சிப்பாயின்
மனைவி!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)
டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!
NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
{{comments.comment}}