மனைவி!

Dec 27, 2025,11:12 AM IST

- ந.தீபலட்சுமி


சில்லென்ற காற்றில் தவழ்ந்து, 

அலை அலையாக வளைந்தும் நெளிந்தும், 

கரு கருவென நீண்ட நெடிய, 

தன் கூந்தலை பின்னி முடித்தாள், 

அவள். 

 

தெளிந்த நீரோடை போன்ற தன் முகத்தில், 

மேடான நெற்றியின் நடுவே, 

செந்தூரத் திலகமிட்டு, 

கண்ணாடியில் தன்னை, 

அளந்தாள்  

அவள். 


 


கல கலவென ஓசையெழுப்ப, 

இரு கைகளிலும் கண்ணாடி 

வளையல்களை  

வாஞ்சையுடன் 

அணிந்தாள் 

அவள். 

 

நேர்த்தியாக உடை அணிந்து, 

நேர் கொண்ட பார்வையில், 

ஜல் ஜல் ஓசையுடன் 

வெளியே வந்தாள் 

அவள். 

 

கூடத்தில் கூடியிருந்தோர்  

அவள் அழகு முகம்  

கண்டு வாய் பிளக்க

அடுத்த நொடி அங்கே 

ஆரம்பமாயிற்று 

ஒப்பாரி! 

 

சிலையாக அமர்ந்திருந்த 

அவள், 

இறந்து போன இந்திய 

சிப்பாயின்  

மனைவி! 


(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்