மனைவி!

Dec 27, 2025,11:12 AM IST

- ந.தீபலட்சுமி


சில்லென்ற காற்றில் தவழ்ந்து, 

அலை அலையாக வளைந்தும் நெளிந்தும், 

கரு கருவென நீண்ட நெடிய, 

தன் கூந்தலை பின்னி முடித்தாள், 

அவள். 

 

தெளிந்த நீரோடை போன்ற தன் முகத்தில், 

மேடான நெற்றியின் நடுவே, 

செந்தூரத் திலகமிட்டு, 

கண்ணாடியில் தன்னை, 

அளந்தாள்  

அவள். 


 


கல கலவென ஓசையெழுப்ப, 

இரு கைகளிலும் கண்ணாடி 

வளையல்களை  

வாஞ்சையுடன் 

அணிந்தாள் 

அவள். 

 

நேர்த்தியாக உடை அணிந்து, 

நேர் கொண்ட பார்வையில், 

ஜல் ஜல் ஓசையுடன் 

வெளியே வந்தாள் 

அவள். 

 

கூடத்தில் கூடியிருந்தோர்  

அவள் அழகு முகம்  

கண்டு வாய் பிளக்க

அடுத்த நொடி அங்கே 

ஆரம்பமாயிற்று 

ஒப்பாரி! 

 

சிலையாக அமர்ந்திருந்த 

அவள், 

இறந்து போன இந்திய 

சிப்பாயின்  

மனைவி! 


(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்