மனைவி!

Dec 27, 2025,11:12 AM IST

- ந.தீபலட்சுமி


சில்லென்ற காற்றில் தவழ்ந்து, 

அலை அலையாக வளைந்தும் நெளிந்தும், 

கரு கருவென நீண்ட நெடிய, 

தன் கூந்தலை பின்னி முடித்தாள், 

அவள். 

 

தெளிந்த நீரோடை போன்ற தன் முகத்தில், 

மேடான நெற்றியின் நடுவே, 

செந்தூரத் திலகமிட்டு, 

கண்ணாடியில் தன்னை, 

அளந்தாள்  

அவள். 


 


கல கலவென ஓசையெழுப்ப, 

இரு கைகளிலும் கண்ணாடி 

வளையல்களை  

வாஞ்சையுடன் 

அணிந்தாள் 

அவள். 

 

நேர்த்தியாக உடை அணிந்து, 

நேர் கொண்ட பார்வையில், 

ஜல் ஜல் ஓசையுடன் 

வெளியே வந்தாள் 

அவள். 

 

கூடத்தில் கூடியிருந்தோர்  

அவள் அழகு முகம்  

கண்டு வாய் பிளக்க

அடுத்த நொடி அங்கே 

ஆரம்பமாயிற்று 

ஒப்பாரி! 

 

சிலையாக அமர்ந்திருந்த 

அவள், 

இறந்து போன இந்திய 

சிப்பாயின்  

மனைவி! 


(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!

news

உடல்நிலை அக்கறை கூட சமூக சேவையே!

news

வையம்!

news

சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!

news

தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!

news

சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!

news

ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?

news

குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்

news

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்