- கா.சா.ஷர்மிளா
இலக்குமி ஈன்றெடுத்த சொல்லின் செல்வனே...!
தமிழ் கடவுளின் பெயரைக் கொண்டவனே...!
இளம் வயதிலேயே கவி புனைந்தவனே...!
பாவலர் போற்றும் பாரதியே.. நீ
புதிய சிந்தனைகளின் நாயகனே.. நீ
பெண்களுக்கு புதுமையில் புது நெறி காட்டியவனே...!
முண்டாசு கவிஞன் மட்டும் கூறிடாது...!
உன்னை சிந்தனைகளின் ஏகலைவனானவனே...!
பன்முகத்தன்மை கொண்ட மீசைக்கார கவிஞனே...!
தொலைநோக்குப் பார்வை கொண்ட மகாகவியே நீ...!

வறுமையிலும் அகத்தில் மகிழ்ச்சியுடனே...!
வறட்சியிலும் முகத்தில் புன்சிறிப்புடனே...!
என்றும் மாறா அணிகலன் கொண்டவனே...!
பாப்பாவுக்கு பாட்டு பாடிய பாவலனே....!
அச்சமென்பது இம்மியளவு இல்லாது...!
பிரிட்டிஷருக்கு எதிராக வீர முழக்கமிட்டவனே..!
கவிக்கு காதலியாக கனவு கண்ணம்மாவையும்...!
இல்லறத்தில் மனைவியாக செல்லம்மாவையும் கொண்டவனே...!
நாடி நரம்பும் விடுதலை முறுக்கேறும் ..
உன் கவியை வாசித்தாலே..!
பாட்டுக்கு ஒரு பாரதி நீயே..!
கவிஞர்களுக்கு ஒரு போதிமரம் நீயே...!
கவி உலக அரசன் நீ...!
மதங்களுக்கு அப்பாற்பட்டது உன் கவியே..!
ஈடில்லா நிலைப்பெற்றது உன் கவியே...!
இன்றும் உன் போல் ஒருவன் பிறக்கவில்லை
இப்பூ உலகிலே...!
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}