சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும்.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் சுமார் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவின் போது விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும். நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை காலை வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரை, 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருக்கும். அவை பின்வருமாறு:
* தேர்தல் தொடர்பான எந்தவித பொதுக்கூட்டத்தையோ, பேரணியையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
* எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம் தொலைக்காட்சி fm ரேடியோ, வாட்ஸ்சப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
* பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் ஈர்க்கிற வகையில், எந்தவித இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தை யாராக இருந்தாலும் பரப்புரை செய்யக்கூடாது. இந்த விதிமுறையை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
* கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளி ஆட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் மாநிலங்கள் என்று எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில்தான் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் பெருமை கொள்ளத்தக்கதாகும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}