சென்னை : விஜய் நடித்துள்ள கோட் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படத்தின் டைரக்டர் வெங்கட் பிரபு இன்று வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. படத்தின் ரிலீசை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் பிறகு அடுத்து யாரை இயக்க போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, விஜய்யின் 68 படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்த படம் அறிவிப்பு வெளியிடப்பட்டது முதலே ரசிகர்களிடம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில், ஏஜிஎஸ் என்டர்டைன்மெட் தயாரிப்பில் உருவாகி உள்ள படத்திற்கு கோட் என பெயரிட்டுள்ளனர். சைன்ஸ் ஃபிக்சிங் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

ஸ்நேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு இது ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டிரைலர் என அனைத்தும் செம ஹிட்டாகி உள்ளதால், படமும் வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 5 ம் தேதி கோட் படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் சமயத்தில், புதிய அப்டேட் ஒன்றை வெங்கட் பிரபு இன்று வெளியிட்டுள்ளார். இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில், கோட் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் படத்தின் கவண்டவுன் துவங்கி விட்டதாகவும், இன்னும் 15 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாகவும் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விஜய்யின் அரசியல் என்ட்ரி, கட்சி கொடி அறிமுகம் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் கோட் படத்தின் அப்டேட்களும் விஜய்யின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஒரே நேரத்தில் பல ட்ரீட் வந்து கொண்டிருப்பதால் கோட் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும் என இப்போதே சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}