வெயிலை சமாளிக்க தயாராகுங்க மக்களே.. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெயில் சுட்டெரிக்குமாம்!

Mar 03, 2025,08:09 PM IST

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் அதிக வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டிலும் வரும் நாட்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்று சுழற்சி  மாலத்தீவு கடற்கரை பகுதியில் நகர்ந்தது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வந்தது. இதற்கிடையே இந்த காற்று சுழற்சி அகன்று செல்வதால் வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவல் தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. இதனால் கர்நாடக பகுதிகளில் வறண்ட கிழக்கு காற்று ஊடுருவி இருப்பதால் கடல் காற்றின் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டு வருகிறது.




இதன் காரணமாக, கர்நாடக மாவட்டத்தில் மார்ச் மாத தொடக்கத்திலேயே அனல் காற்று வீசும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக  கார்வார் பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.


இந்த நிலையில், கர்நாடக மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 4.6 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உயரக்கூடும். இதனால் பொதுமக்கள் மதியம் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கர்நாடகா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரக்கூடிய நாட்களில் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

news

தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

news

புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்