ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jun 25, 2025,12:58 PM IST

சென்னை: வேலூரில் நடைபெறும் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் இன்று கிளம்பிச் சென்றார்.


வேலூரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக அவர் ரயில் மூலம் காட்பாடி சென்று அங்கிருந்து வேலூர் செல்கிறார். காலை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வருக்கு திமுகவினர் திரளாக கூடி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.


அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் திரண்டு வந்து முதல்வரை வழியனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:



இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!


இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.


மாண்புமிகு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி,  மற்றும் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… ஏசி பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.


ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்