மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்

May 09, 2025,05:07 PM IST

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் இன்று நான்கு மாசி வீதிகளிலும் வலம் வருகிறது.இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி பரவச வெள்ளத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடம் சித்திரை திருவிழா விடுமுறை நாட்களில் வந்ததால், நிறைய பக்தர்கள் கலந்து கொண்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


சித்திரை திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று (மே 08) கோலாகலமாக நடந்தது. சரியாக காலை 8.45 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  திருக்கல்யாணத்தை கண்டு பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டனர்.




இதனை தொடர்ந்து  மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி என்று 4 மாசி வீதிகளில் வலம் வரும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் மதுரைக்கு வருவது வழக்கம். 


அந்த வகையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை 6:00 மணி அளவில் நிலையிலிருந்து மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை எழுந்தருளிய பெரிய தேரும் அடுத்தடுத்து  கிளம்பியது. ‌பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாசி வீதிகளில் திருத்தேர் ஆடி அசைந்து பவானி வருகிறது. இதன் அழகை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் ஹரஹர சுந்தர.. சம்போ சங்கர சோம சுந்தர மஹாதேவா..

மீனாட்சி சுந்தர.. கல்யாண சுந்தர.. வாரே வா.. என கோஷங்கள் முழங்கி உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் ஆடி அசைந்து வரும் தேரை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஏராளமானோர் தேர்விழாவில் கலந்து கொண்டு வருவதால், அவர்களின் தாகத்தை தணிக்க வழிநெடுகிலும் மோர், தண்ணீர், குளிர்பானங்கள் பந்தல்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்