எனக்கென்று யாரும் இல்லை.. நாட்டின் மக்களே எனது வாரிசுகள்.. பீகாரில் பிரதமர் மோடி பேச்சு

May 22, 2024,05:42 PM IST

டெல்லி: எனக்கு வாரிசுகள் இல்லை. இந்த நாட்டின் மக்களே எனது வாரிசுகள். பீகார் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் நான் பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.


பீகார் மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 


மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்கள் மீண்டும் நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போதெல்லாம் வகுப்பு வாதம், ஜாதி வாதம் மற்றும் வாரிசு அரசியல் கலாச்சாரத்தை வளர்க்கிறார்கள். எனக்கு வாரிசுகள் இல்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் பீகார் மக்கள் மீது விழிப்புணர்வை வளர்த்து வந்தனர். இந்த நாட்டின் மக்களே எனது வாரிசுகள். பீகார் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் நான் பாடுபடுவேன்.




ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்த மாற்றத்தை செய்வதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒருபோதும் நினைத்ததில்லை. ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்கள் பண பலத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. அதே நேரத்தில் ஏழைகளும், சாமானியர்களும் பல ஆண்டுகளாக சிறைக்குப் பின்னால் இருக்க வேண்டி இருந்தது. ஏழை, எளிய மக்களுக்கு நீதி வழங்குவதற்காக பழைய தண்டனைச் சட்டத்தை மாற்றி அமைத்து "நியாய சம்ஹிதா" எனப்படும் நீதி சட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. 


பீகார் மக்களுக்கு எதிராக திமுகவினர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலைவர்கள் அவதூறான வார்த்தைகளை  பயன்படுத்திய நேரத்தில் காங்கிரஸ் அமைதியாக இருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தி, வாக்காளர்கள் இருவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக அரசுக்கு முதல் கோரிக்கை.. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கோரிக்கை!

news

CM MK Stalin: மு.க.ஸ்டாலின் இல்லாத தமிழ்நாடு சட்டசபை.. பெரும் வேதனையில் திமுக!

news

Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!

news

வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை

news

TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?

news

ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!

news

அதிர வைத்த எடப்பாடி பழனிச்சாமி வியூகம்.. திமுகவுக்கு 2வது இடம் கூட கிடைக்கலையே!

news

திராவிட மாடலுக்கு இது தோல்வியா?.. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்...சொல்வது என்ன?

news

சட்டசபையில்.. தவெக விற்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால் என்ன செய்வார் விஜய்?

அதிகம் பார்க்கும் செய்திகள்