சென்னை: ஏப்ரல் 15ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் சம்பந்தமான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கட்சிகள், கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளிலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இவர்களுக்கு மட்டும் தேர்தல் வேலைகள் என்று இல்லாமல், பள்ளி ஆசிரிகளுக்கும், அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதற்காக, பள்ளிகளுக்கும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், வருகின்ற 23ஆம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளது. இதற்கு இடையில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் வசதிக்காக வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தேர்வுகளுக்காக 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளுக்கு தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அரசு பள்ளிகளுக்கு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}