சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும். வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருவதால், வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபாடு இல்லை. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டு தான் வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு வருவதால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாமலும் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சற்று குறையும் என அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடுமாம். மேலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துமாம். கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 முதல் 37 டிகிரி வரை வெயில் பதிவாகும்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகம் மட்டுமான வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}