சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும். வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருவதால், வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபாடு இல்லை. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டு தான் வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு வருவதால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாமலும் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சற்று குறையும் என அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடுமாம். மேலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துமாம். கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 முதல் 37 டிகிரி வரை வெயில் பதிவாகும்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகம் மட்டுமான வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}