சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும். வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருவதால், வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபாடு இல்லை. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டு தான் வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு வருவதால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாமலும் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சற்று குறையும் என அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடுமாம். மேலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துமாம். கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 முதல் 37 டிகிரி வரை வெயில் பதிவாகும்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகம் மட்டுமான வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}