சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும். வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருவதால், வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபாடு இல்லை. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டு தான் வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு வருவதால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாமலும் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சற்று குறையும் என அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடுமாம். மேலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துமாம். கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 முதல் 37 டிகிரி வரை வெயில் பதிவாகும்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகம் மட்டுமான வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}