குளுகுளுவென மாறிய தமிழ்நாடு.. 24 மணி நேரத்தில்.. எந்த மாவட்டத்தில்.. எவ்வளவு மழை.. தெரியுமா?

May 10, 2024,05:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் அடியோடு குறைந்து தற்போது கோடை மழை களை கட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மே மாதத்தில் நிலவக்கூடிய அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வெப்பம் தணிந்துள்ளது. இதனால் காலநிலை சாதகமாக நிலவுவதால் மக்கள் குஷியில் உள்ளனர்.




தென்னிந்திய பகுதிகளின்  மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாட்டில் 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 6 மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மாலை நேரத்தில் நல்ல மழை பெய்து இருந்தது.


இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக மிக கன மழைக்கான 13 சென்டிமீட்டர்  மழை பதிவாகியுள்ளது. 


தேனி மாவட்டம் பெரியகுளம், மதுரை மாவட்டம் பேரையூர் ஆகிய இரண்டு ஊர்களில் தலா  9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மேலும் குமரி மாவட்டம் புத்தன் அணை, ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


சென்னையில் இன்று காலை முதல் வானம் மூடி மூடிக் காணப்படுகிறது. வெயில் பெரிதாக இல்லை. சுட்டெரிக்கும் வெயில் குறைந்து கிளைமேட்டும் சூப்பராக இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்