சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் அடியோடு குறைந்து தற்போது கோடை மழை களை கட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மே மாதத்தில் நிலவக்கூடிய அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வெப்பம் தணிந்துள்ளது. இதனால் காலநிலை சாதகமாக நிலவுவதால் மக்கள் குஷியில் உள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாட்டில் 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 6 மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மாலை நேரத்தில் நல்ல மழை பெய்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக மிக கன மழைக்கான 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம், மதுரை மாவட்டம் பேரையூர் ஆகிய இரண்டு ஊர்களில் தலா 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் குமரி மாவட்டம் புத்தன் அணை, ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் வானம் மூடி மூடிக் காணப்படுகிறது. வெயில் பெரிதாக இல்லை. சுட்டெரிக்கும் வெயில் குறைந்து கிளைமேட்டும் சூப்பராக இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்
போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!
சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?
கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!
ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!
பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!
அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!
{{comments.comment}}