டெல்லி: ரூ. 2000க்கு மேல் யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது மக்களை திசை திருப்ப முயலும் அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் இப்போது எதற்கெடுத்தாலும் யுபிஐ என்று ஆகி விட்டது. கையில் காசு இல்லாமலேயே ஜிபே, போன்பே, பேடிஎம் மூலம் மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை செலுத்தப் பழகி விட்டனர். டீ சாப்பி்டடால் கூட ஜிபே செய்யும் ஆட்கள்தான் அதிகம். அந்த அளவுக்கு காய்கறி வாங்குவது, மளிகைப் பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றுக்குமே யுபிஐ பரிவர்த்தனைகள்தான் அதிக அளவில் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் திடீரென ஒரு செய்தி வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது ரூ. 2000க்கு மேல் யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது மக்களை அதிர வைத்தது. யுபிஐ மூலம்தான் பெரும்பாலோனார் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கும் ஜிஎஸ்டி என்று வந்தால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் மக்களின் அதிர்ச்சிக்குக் காரணம்.
ஆனால் இந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் தற்போது மறுத்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ரூ. 2000க்கு மேல் பணப் பரிவர்த்தனையை யுபிஐ மூலம் செய்தால் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தி தவறானது, உண்மைக்குப் புறம்பானது, அடிப்படை ஆதாரமற்றது. மக்களை திசை திருப்பும் வகையிலான இந்த செய்தியை நம்ப வேண்டாம். அப்படி ஒரு திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}