அதிமுகவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லைண்ணே.. அண்ணாமலை அதிரடி!

Sep 21, 2023,08:14 PM IST
கோவை:  அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை வந்த அண்ணாமலை அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக - பாஜக இடையிலான திடீர் பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அண்ணாமலை பேசியதாவது:

அதிமுக பாஜக இடையே எந்த பிரச்னையும் இல்லை. அதேபோல அதிமுக அண்ணாமலை இடையேயும் பிரச்சினை இல்லை. ஒரு பிரச்சினையும் இல்லண்ணே. நான் யாரையும் தவறாக பேசவில்லை. எனது கருத்தில் எந்த மாறுதலும் இல்லை. 



அதிமுக, பாஜக இடையிலே அடிப்படையிலேயே வேறுபாடுகள் இருக்கின்றன. கட்சிகளுக்கிடையே மோதல்கள் வரத்தான் செய்யும். அதற்காக அதிமுக தலைவர்களுடன் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை .

எனக்கும் அதிமுக தலைவருக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி பற்றி அதிமுக கூறிய கருத்துக்கு நான் பதில் அளிக்க முடியாது. எனது அரசியலில் தெளிவாக இருக்கிறேன். எனக்கு தன்மானம் முக்கியம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. இரு கட்சிகளின் கருத்துக்களை ஒன்றிணைக்க முடியாது.

மகளிருகான 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு நாட்களாக விநாயகர் ஊர்வலம் நடப்பதால் இடையூறு விளைவிக்காமல் நான் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இனி மீண்டும் அது தொடரவுள்ளது என்றார் அண்ணாமலை

செல்லூர் ராஜுவும் பல்டி

இதேபோல அண்ணாமலைக்கு எதிராக நாக்கை துண்டிப்போம், நாக்கு அழுகி விடும் என்று ஆவேசம் காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் இரு கட்சிகளிடையேயும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு நாங்க பதிலளித்தோம்.. அவ்வளவுதான் என்று கூறி பல்டி அடித்துள்ளார்.

அத்தோடு நில்லாமல் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும். அதுதான் எங்களது எண்ணமும். அதேபோல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும். அதை பாஜக ஏற்க வேண்டும் என்று கூறினார்.

ஆக, மொத்தம் இந்த சண்டையும் புஸ்வானம்தான் போல!

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்