சென்னை: அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா பட இயக்குனர் சுகுமார் தமிழ் சினிமாவில் அஜிதை வைத்து இயக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் சுகுமார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் முதல் முதலாக தெலுங்கில் ஆர்யா என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கிய புஷ்பா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து, பல கோடி ரூபாய் வசூலில் சாதனை படைத்தது.
அதேபோல் புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2 தி ரூல் படம் சமீபத்தில் வெளியாகி 1800 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து விரைவில் புஷ்பா படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சுகுமார் முதலில் தளபதி விஜய் வைத்து படம் இயக்க ஆசை. பிறகு அஜித் குமாரை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன். தொடர்ந்து மூன்றாவதாக கார்த்திகை எனக்கு மிகவும் பிடிக்கும். காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என கூறினார்.

இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் படத்தின் முதல் நாளை உற்சாகத்துடன் வரவேற்றனர். இப்படம் முதல் நாளில் மட்டும் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியால் ரசிகர்கள் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அஜித் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் விஜய், அஜித், கார்த்தி, ஆகியோரை இயக்க விருப்பம் இருப்பதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இதனால் முதலில் விஜய் வைத்து இயக்க ஆசைப்பட்டு, விஜய் அரசியலுக்கு சென்றதால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. எனவே அநேகமாக அஜித்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பேசப்படுகிறது .
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் அட்லி. இவர் தெலுங்கில் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதேபோல் அல்லு அர்ஜுனனை வைத்து இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்ற புஷ்பா பட சுகுமார் தமிழில் அஜித்தை வைத்து அதிரடி காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}