சென்னை: சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு எந்த மழையையும் எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருட அக்டோபர் மாதம்தான் மிகவும் மோசமான மழைப் பொழிவை கொண்ட மாதமாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டது. ஆனால் மிகவும் மெதுவாக இருக்கிறது. பெரிய அளவில் மழை இல்லை. மழை தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவுக்கு குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் தேஜ் புயல் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை. அதேசமயம், வங்கக் கடலில் குறைந்த காற்றவுத்தத் தாழ்வு உருவாகியுள்ள போதிலும் கூட உடனடியாக மழைக்கு வாய்ப்பில்லை.
இதையே தமிழ்நாடு வெதர்மேன் இன்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை யில் 2016ம் ஆண்டில்தான் அந்த வருடத்து அக்டோபர் மாதத்தில் மிகவும் மோசமான மழைப்பொழிவு இருந்தது. அதாவது அந்த மாதத்தில் மொத்தமே கிட்டத்தட்ட 22 மில்லி மீட்டர் அளவுக்குத்தான் மழை பெய்தது. அதன் பிறகு இந்த வருடம் அக்டோபர் மாதம்தான் மிகவும் குறைந்த மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்கு வங்கக் கடலிலிருந்து எந்த நல்ல செய்தியும் சென்னைக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
இருப்பினும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}