சென்னை: சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு எந்த மழையையும் எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருட அக்டோபர் மாதம்தான் மிகவும் மோசமான மழைப் பொழிவை கொண்ட மாதமாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டது. ஆனால் மிகவும் மெதுவாக இருக்கிறது. பெரிய அளவில் மழை இல்லை. மழை தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவுக்கு குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் தேஜ் புயல் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை. அதேசமயம், வங்கக் கடலில் குறைந்த காற்றவுத்தத் தாழ்வு உருவாகியுள்ள போதிலும் கூட உடனடியாக மழைக்கு வாய்ப்பில்லை.
இதையே தமிழ்நாடு வெதர்மேன் இன்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை யில் 2016ம் ஆண்டில்தான் அந்த வருடத்து அக்டோபர் மாதத்தில் மிகவும் மோசமான மழைப்பொழிவு இருந்தது. அதாவது அந்த மாதத்தில் மொத்தமே கிட்டத்தட்ட 22 மில்லி மீட்டர் அளவுக்குத்தான் மழை பெய்தது. அதன் பிறகு இந்த வருடம் அக்டோபர் மாதம்தான் மிகவும் குறைந்த மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்கு வங்கக் கடலிலிருந்து எந்த நல்ல செய்தியும் சென்னைக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
இருப்பினும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}