சென்னை: சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு எந்த மழையையும் எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருட அக்டோபர் மாதம்தான் மிகவும் மோசமான மழைப் பொழிவை கொண்ட மாதமாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டது. ஆனால் மிகவும் மெதுவாக இருக்கிறது. பெரிய அளவில் மழை இல்லை. மழை தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவுக்கு குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் தேஜ் புயல் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை. அதேசமயம், வங்கக் கடலில் குறைந்த காற்றவுத்தத் தாழ்வு உருவாகியுள்ள போதிலும் கூட உடனடியாக மழைக்கு வாய்ப்பில்லை.
இதையே தமிழ்நாடு வெதர்மேன் இன்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை யில் 2016ம் ஆண்டில்தான் அந்த வருடத்து அக்டோபர் மாதத்தில் மிகவும் மோசமான மழைப்பொழிவு இருந்தது. அதாவது அந்த மாதத்தில் மொத்தமே கிட்டத்தட்ட 22 மில்லி மீட்டர் அளவுக்குத்தான் மழை பெய்தது. அதன் பிறகு இந்த வருடம் அக்டோபர் மாதம்தான் மிகவும் குறைந்த மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு வங்கக் கடலிலிருந்து எந்த நல்ல செய்தியும் சென்னைக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
இருப்பினும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}