டில்லி : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் சிலவும் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், நிதித்துறை நிறுவனங்கள், மண்டல கிராமப்பு வங்கிகள் ஆகியவற்றிற்கு ஜனவரி 22ம் தேதியன்று அரை நாள் விடுமுறை விடப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்திருந்தது.
அதோடு மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பகல் 02.30 வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள நிதித்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கும் அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசே இப்படி ஒரு உத்தரவை வெளியிட்டு விட்டதால் டில்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தனது விடுமுறை உத்தரவை வாபஸ் பெற்று விட்டது.
ஏற்கனவே இறைச்சிக்கடைகள், மதுக்கடைகள் ஜனவரி 22ம் தேதி மூடப்பட வேண்டும் என பல மாநிலங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியார் துறை வங்கிகளான ஹச்டிஎஃப்சி, ஆக்சிஸ் போன்ற வங்கிகளும் ஜனவரி 22ம் தேதியன்று மூடப்படுவதாக அறிவித்துள்ளன.
ஏற்கனவே ஜனவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களுடன் சேர்த்து மொத்தம் 16 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநில அரசு விடுமுறைகள் வேறு இருக்கும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் காரணமாகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}