களை கட்டிய 3வது கட்ட லோக்சபா தேர்தல்.. குஜராத்தில் ஓட்டுப் போட்ட பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா

May 07, 2024,05:19 PM IST
குஜராத்: இன்று 3ஆம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் ஓட்டு போட்டார் பிரதமர் மோடி. அதேபோல மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மான்சுக் மாண்டவ்யா ஆகியோரும் குஜராத்தில் வாக்களித்தனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 19ம் தேதி மற்றும் ஏப்ரல் 26ம் தேதிகளில் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று  3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதோத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். குஜராத்தில் 25 தொகுதிகள், கர்நாடகத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம் 4, கோவாவில் 2, மேற்கு வங்கத்தில் 4, தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் 284 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைகிறது. அதாவது மொத்தம் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதிக்கும் மேலான தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் முடிகிறது.



பிரதமர் மோடி இன்று குஜராத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை புறப்பட்ட பிரதமர், அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அதே பள்ளியில் வாக்கு, அவரும் அங்கேயே வாக்கு பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்கு முன்னர் பிரதமர் மோடி தனது இணையதள பக்கத்தில், இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். வாக்காளர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என்று தெரிவித்திருந்தார்.

அடுத்து மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதி மீதமுள்ள நான்கு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் என்னப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்