சென்னை: அதிமுக- தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான 3ஆம் கட்ட பேச்சு வார்த்தை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
ஏற்கனவே வடசென்னை, கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட நான்கு தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் வட சென்னைக்குப் பதில் வேறு தொகுதியை தேமுதிக கேட்பதாலும், ராஜ்யசபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்று அடம் பிடிப்பதாலும்தான் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 1ஆம் தேதி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமம் வீட்டில் அதிமுக தேர்தல் குழுவினர் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி உறுதியானதாக தகவல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது 4 மக்களவைத் தொகுதியுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கண்டிப்பாக வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். இதனால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டமால் இழுபறி ஏற்பட்டு வந்தது.
தேமுதிக உடனான பேச்சுவார்த்தை சமூகமாக சென்று கொண்டிருப்பதாக நேற்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக தேர்தல் குழு உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோர் இணைந்து தேமுதிக தரப்புடன் பேசவுள்ளனர். இதே குழுதான் நேற்று நடிகர் மன்சூர் அலிகானுடனும் பேசியது.
இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}