அதிமுக - தேமுதிக..இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை இன்னிக்காச்சும் முடியுமா..எதிர்பார்ப்பில் அதிமுக!

Mar 14, 2024,10:32 AM IST

சென்னை: அதிமுக- தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான 3ஆம் கட்ட பேச்சு வார்த்தை  அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. 


ஏற்கனவே வடசென்னை, கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட நான்கு தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் வட சென்னைக்குப் பதில் வேறு தொகுதியை தேமுதிக கேட்பதாலும், ராஜ்யசபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்று அடம் பிடிப்பதாலும்தான் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்று கூறப்படுகிறது.




லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 1ஆம் தேதி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்  ‌சாலிகிராமம் வீட்டில் அதிமுக தேர்தல் குழுவினர் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி உறுதியானதாக தகவல் தெரிவித்தது. 


இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது 4 மக்களவைத் தொகுதியுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கண்டிப்பாக வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். இதனால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டமால் இழுபறி ஏற்பட்டு வந்தது.


தேமுதிக உடனான பேச்சுவார்த்தை சமூகமாக சென்று கொண்டிருப்பதாக நேற்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக தேர்தல் குழு உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோர் இணைந்து தேமுதிக தரப்புடன் பேசவுள்ளனர். இதே குழுதான் நேற்று நடிகர் மன்சூர் அலிகானுடனும் பேசியது. 


இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்