திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.. இவங்கெல்லாம் பாதயாத்திரை வர வேண்டாம்.. தேவஸ்தானம் கோரிக்கை!

Oct 26, 2024,11:07 AM IST

திருப்பதி: திருப்பதிக்கு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு நோய்கள் உள்ளவர்கள் பாதயாத்திரை வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


உலகப்பிரசித்த பெற்ற கோவில்களுள் ஒன்று திருப்பதி. இந்த கோவிலில் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள் இங்கு தங்கியிருந்து தரிசனம் செய்வது வழக்கம். கீழ் திருப்பதியில் இருந்து மலைக்கு செல்லும் நடைபாதை சிறப்பானதாகும். இப்பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் வருகின்ற பக்தர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இங்கும் வரும் பக்தர்களில் ஏராளமானோர் பாதையாத்திரையாக வருவது வழக்கம்.




இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் பாதையாத்திரை வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த உத்தரவின் படி கீழ்க்கண்டோர் பாதயாத்திரையாக வரக் கூடாது:


60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள்

ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

ஆஸ்துமா வீஸிங் பிரச்சினை உள்ளவர்கள்

வலிப்பு நோய் உள்ளவர்கள்

மூட்டு பிரச்சனைகள் உடையவர்கள் 


இவர்கள் எல்லாம் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.  படி ஏறும்போது, ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதாலும், உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய்க்காரர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல என்பதாலும், அவர்கள் வாகனங்களில் வந்து தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்