திருப்பதி: திருப்பதிக்கு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு நோய்கள் உள்ளவர்கள் பாதயாத்திரை வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகப்பிரசித்த பெற்ற கோவில்களுள் ஒன்று திருப்பதி. இந்த கோவிலில் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள் இங்கு தங்கியிருந்து தரிசனம் செய்வது வழக்கம். கீழ் திருப்பதியில் இருந்து மலைக்கு செல்லும் நடைபாதை சிறப்பானதாகும். இப்பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் வருகின்ற பக்தர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இங்கும் வரும் பக்தர்களில் ஏராளமானோர் பாதையாத்திரையாக வருவது வழக்கம்.

இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் பாதையாத்திரை வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த உத்தரவின் படி கீழ்க்கண்டோர் பாதயாத்திரையாக வரக் கூடாது:
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள்
ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
ஆஸ்துமா வீஸிங் பிரச்சினை உள்ளவர்கள்
வலிப்பு நோய் உள்ளவர்கள்
மூட்டு பிரச்சனைகள் உடையவர்கள்
இவர்கள் எல்லாம் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது. படி ஏறும்போது, ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதாலும், உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய்க்காரர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல என்பதாலும், அவர்கள் வாகனங்களில் வந்து தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}