மார்கழி 14 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 14.. உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்!

Dec 28, 2024,04:46 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 14 :


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணனை பாடலோர் எம்பாவாய்.




பொருள் : 


உங்கள் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் தேங்கி உள்ள நீரில் சிவந்த அழகிய ஆம்பல் மலர்கள் குவிந்திருந்த தங்களின் வாயை திறந்து, மலர்ந்து விட்டன. காவி உடையணிந்த துறவிகள் தங்களின் வெண் பற்கள் ஒளிவீச கோவில்களை நோக்கி, திருச்சங்கினை முழங்கி ஒலி எழுப்புவதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என வீரமாக பேசிய பெண்ணே, கொடுத்த வாக்கினை மறந்து விட்டு, இப்படி வெட்கம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனை, தாமரை போன்ற விரிந்த அழகிய சிவந்த கண்களை உடைய கண்ணனை பாட இன்னும் எழுந்திருக்காமல் இப்படி உறங்கிக் கொண்டிருக்கிறாயே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்

news

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?

news

விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!

news

Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?

news

நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்