மார்கழி 14 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 14.. உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்!

Dec 28, 2024,04:46 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 14 :


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணனை பாடலோர் எம்பாவாய்.




பொருள் : 


உங்கள் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் தேங்கி உள்ள நீரில் சிவந்த அழகிய ஆம்பல் மலர்கள் குவிந்திருந்த தங்களின் வாயை திறந்து, மலர்ந்து விட்டன. காவி உடையணிந்த துறவிகள் தங்களின் வெண் பற்கள் ஒளிவீச கோவில்களை நோக்கி, திருச்சங்கினை முழங்கி ஒலி எழுப்புவதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என வீரமாக பேசிய பெண்ணே, கொடுத்த வாக்கினை மறந்து விட்டு, இப்படி வெட்கம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனை, தாமரை போன்ற விரிந்த அழகிய சிவந்த கண்களை உடைய கண்ணனை பாட இன்னும் எழுந்திருக்காமல் இப்படி உறங்கிக் கொண்டிருக்கிறாயே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்