- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 14 :
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனை பாடலோர் எம்பாவாய்.

பொருள் :
உங்கள் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் தேங்கி உள்ள நீரில் சிவந்த அழகிய ஆம்பல் மலர்கள் குவிந்திருந்த தங்களின் வாயை திறந்து, மலர்ந்து விட்டன. காவி உடையணிந்த துறவிகள் தங்களின் வெண் பற்கள் ஒளிவீச கோவில்களை நோக்கி, திருச்சங்கினை முழங்கி ஒலி எழுப்புவதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என வீரமாக பேசிய பெண்ணே, கொடுத்த வாக்கினை மறந்து விட்டு, இப்படி வெட்கம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனை, தாமரை போன்ற விரிந்த அழகிய சிவந்த கண்களை உடைய கண்ணனை பாட இன்னும் எழுந்திருக்காமல் இப்படி உறங்கிக் கொண்டிருக்கிறாயே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}