- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 14 :
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனை பாடலோர் எம்பாவாய்.
பொருள் :
உங்கள் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் தேங்கி உள்ள நீரில் சிவந்த அழகிய ஆம்பல் மலர்கள் குவிந்திருந்த தங்களின் வாயை திறந்து, மலர்ந்து விட்டன. காவி உடையணிந்த துறவிகள் தங்களின் வெண் பற்கள் ஒளிவீச கோவில்களை நோக்கி, திருச்சங்கினை முழங்கி ஒலி எழுப்புவதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என வீரமாக பேசிய பெண்ணே, கொடுத்த வாக்கினை மறந்து விட்டு, இப்படி வெட்கம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனை, தாமரை போன்ற விரிந்த அழகிய சிவந்த கண்களை உடைய கண்ணனை பாட இன்னும் எழுந்திருக்காமல் இப்படி உறங்கிக் கொண்டிருக்கிறாயே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}