மார்கழி 4 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 4.. ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்!

Dec 18, 2024,06:42 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 4:


ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.




பொருள் :


மழையின் கடவுளாக விளங்கும் கண்ணனே! உன்னுடைய தாராள வள்ளல் போன்ற தன்மையை மறைத்து வைக்காதே. கடலுக்கள் புகுந்து அங்கிருக்கும் நீரை பருகி கொண்டு மேலே ஏறி, மேகமாகி, பிரளய காலத்திலும் காக்கும் ஒருவனாக இருக்கும் எங்கள் தலைவனாகிய கண்ணனின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறி, அழகிய தோள்களை உடைய பரந்தாமனின் வலது கரத்தில் இருக்கும் சக்கரம் போன்ற மின்னல் மின்ன, இடது கரத்தில் இருக்கும் திருச்சங்கினை போல் இடி முழங்கி, சாரங்க வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளை போல் சரம் சரமாக மழையை பொழிந்திடு. உனது மழைக் கொடையினால் இந்த உலகம் பிழைக்க வேண்டும். நாங்களும் மகிழ்ந்திடுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்