- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 4:
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள் :
மழையின் கடவுளாக விளங்கும் கண்ணனே! உன்னுடைய தாராள வள்ளல் போன்ற தன்மையை மறைத்து வைக்காதே. கடலுக்கள் புகுந்து அங்கிருக்கும் நீரை பருகி கொண்டு மேலே ஏறி, மேகமாகி, பிரளய காலத்திலும் காக்கும் ஒருவனாக இருக்கும் எங்கள் தலைவனாகிய கண்ணனின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறி, அழகிய தோள்களை உடைய பரந்தாமனின் வலது கரத்தில் இருக்கும் சக்கரம் போன்ற மின்னல் மின்ன, இடது கரத்தில் இருக்கும் திருச்சங்கினை போல் இடி முழங்கி, சாரங்க வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளை போல் சரம் சரமாக மழையை பொழிந்திடு. உனது மழைக் கொடையினால் இந்த உலகம் பிழைக்க வேண்டும். நாங்களும் மகிழ்ந்திடுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}