- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 4:
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள் :
மழையின் கடவுளாக விளங்கும் கண்ணனே! உன்னுடைய தாராள வள்ளல் போன்ற தன்மையை மறைத்து வைக்காதே. கடலுக்கள் புகுந்து அங்கிருக்கும் நீரை பருகி கொண்டு மேலே ஏறி, மேகமாகி, பிரளய காலத்திலும் காக்கும் ஒருவனாக இருக்கும் எங்கள் தலைவனாகிய கண்ணனின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறி, அழகிய தோள்களை உடைய பரந்தாமனின் வலது கரத்தில் இருக்கும் சக்கரம் போன்ற மின்னல் மின்ன, இடது கரத்தில் இருக்கும் திருச்சங்கினை போல் இடி முழங்கி, சாரங்க வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளை போல் சரம் சரமாக மழையை பொழிந்திடு. உனது மழைக் கொடையினால் இந்த உலகம் பிழைக்க வேண்டும். நாங்களும் மகிழ்ந்திடுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}