- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 7:
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள் :
குருவிகள் எழுப்பும் கீச்கீச் என்ற சத்தம் உனக்கு கேட்கவில்லையா, பேய் போல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே? நறுமணம் வீசும் கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் மத்துகளைக் கொண்ட தயிர் கடையம் ஓசையும், அப்போது அவர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் பல விதமான அணிகலன்களும், கை வளையல்களும் எழுப்பும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? அனைவரையும் தலைமை தாங்கி அழைத்து சொல்வதாக சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணனா, கேசவா என புகழ்ந்து பாடுவது கூட உன்னுடைய காதுகளில் கேட்காமல் இப்படி ஆழ்ந்து தூங்குவதன் மர்மம் என்ன? ஒளி வீசும் முகத்தை உடைய பெண்ணே உன்னுடைய வீட்டின் கதவை திறந்த வெளியே வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}