- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 7:
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள் :
குருவிகள் எழுப்பும் கீச்கீச் என்ற சத்தம் உனக்கு கேட்கவில்லையா, பேய் போல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே? நறுமணம் வீசும் கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் மத்துகளைக் கொண்ட தயிர் கடையம் ஓசையும், அப்போது அவர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் பல விதமான அணிகலன்களும், கை வளையல்களும் எழுப்பும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? அனைவரையும் தலைமை தாங்கி அழைத்து சொல்வதாக சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணனா, கேசவா என புகழ்ந்து பாடுவது கூட உன்னுடைய காதுகளில் கேட்காமல் இப்படி ஆழ்ந்து தூங்குவதன் மர்மம் என்ன? ஒளி வீசும் முகத்தை உடைய பெண்ணே உன்னுடைய வீட்டின் கதவை திறந்த வெளியே வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}