- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 7:
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பொருள் :
குருவிகள் எழுப்பும் கீச்கீச் என்ற சத்தம் உனக்கு கேட்கவில்லையா, பேய் போல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே? நறுமணம் வீசும் கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் மத்துகளைக் கொண்ட தயிர் கடையம் ஓசையும், அப்போது அவர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் பல விதமான அணிகலன்களும், கை வளையல்களும் எழுப்பும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? அனைவரையும் தலைமை தாங்கி அழைத்து சொல்வதாக சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணனா, கேசவா என புகழ்ந்து பாடுவது கூட உன்னுடைய காதுகளில் கேட்காமல் இப்படி ஆழ்ந்து தூங்குவதன் மர்மம் என்ன? ஒளி வீசும் முகத்தை உடைய பெண்ணே உன்னுடைய வீட்டின் கதவை திறந்த வெளியே வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}