- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 8 :
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

பொருள் :
கிழக்கில் வானம் பொழுது விடிய துவங்கி விட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக தோட்டங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விடும். உன்னை விட்டு கோவிலுக்கு செல்ல முற்பட்ட மற்ற தோழிகளை தடுத்து அழைத்து வந்துள்ளோம். தோழிகள் அனைவரும் வந்து உன்னை அழைத்துச் செல்வதற்காக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காதுகளில் பெரிய தோடுகளை அணிந்தள்ள பெண்ணே, எழுந்து வா. குதிரையாக வந்து கேசி என்னும் அசுரனை வாயை பிளந்து வதம் செய்தவன், அசுரர்கள் பலரை வீழ்த்திய தேவர்களுக்க எல்லாம் தலைவனாக இருப்பவன் நம்முடைய கண்ணன். அவனை வழிபட்டு வணங்கினால் நமக்கு என்னென்ன குறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து கண்டறிந்து அவை அனைத்தையும் நீக்கி, நமக்கு அருள் செய்திடுவான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி மிரட்டியதாக.. யூடியூபர் IPDS திருநாவுக்கரசு, 2 திமுகவினர்அதிரடி கைது
தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?
மூவரி கவிதைகள்.. சிறுமியின் சிரிப்பில் ஜவ்வு மிட்டாய் காளியின் நாவு
மருத்துவர் தினம்.. டாக்டர் தான் என் தெய்வம்!
சிந்தனைச் சிதறல்.. விதையிட்டு வளர்த்தவருக்கே முதலுரிமை!
National Doctor's Day: இந்தியாவில் டாக்டர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுது தெரியுமா..?
தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு கலை ரத்னா விருது
அப்பா கண்ணாடி!
Short Story: கோகிலா
{{comments.comment}}