மார்கழி 8 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 8.. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு!

Dec 22, 2024,04:39 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 8 :


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.




பொருள் :


கிழக்கில் வானம் பொழுது விடிய துவங்கி விட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக தோட்டங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விடும். உன்னை விட்டு கோவிலுக்கு செல்ல முற்பட்ட மற்ற தோழிகளை தடுத்து அழைத்து வந்துள்ளோம். தோழிகள் அனைவரும் வந்து உன்னை அழைத்துச் செல்வதற்காக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காதுகளில் பெரிய தோடுகளை அணிந்தள்ள பெண்ணே, எழுந்து வா. குதிரையாக வந்து கேசி என்னும் அசுரனை வாயை பிளந்து வதம் செய்தவன், அசுரர்கள் பலரை வீழ்த்திய தேவர்களுக்க எல்லாம் தலைவனாக இருப்பவன் நம்முடைய கண்ணன். அவனை வழிபட்டு வணங்கினால் நமக்கு என்னென்ன குறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து கண்டறிந்து அவை அனைத்தையும் நீக்கி, நமக்கு அருள் செய்திடுவான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP S Janaki: இனியவளே! தாயே! இன்னிசைக் குயிலே!!

news

ஆயிரம் பாடல் பாடி, அமுதம் போல் தந்தவளே!

news

RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!

news

மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

news

Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்

அதிகம் பார்க்கும் செய்திகள்