மார்கழி 8 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 8.. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு!

Dec 22, 2024,04:39 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 8 :


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.




பொருள் :


கிழக்கில் வானம் பொழுது விடிய துவங்கி விட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக தோட்டங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விடும். உன்னை விட்டு கோவிலுக்கு செல்ல முற்பட்ட மற்ற தோழிகளை தடுத்து அழைத்து வந்துள்ளோம். தோழிகள் அனைவரும் வந்து உன்னை அழைத்துச் செல்வதற்காக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காதுகளில் பெரிய தோடுகளை அணிந்தள்ள பெண்ணே, எழுந்து வா. குதிரையாக வந்து கேசி என்னும் அசுரனை வாயை பிளந்து வதம் செய்தவன், அசுரர்கள் பலரை வீழ்த்திய தேவர்களுக்க எல்லாம் தலைவனாக இருப்பவன் நம்முடைய கண்ணன். அவனை வழிபட்டு வணங்கினால் நமக்கு என்னென்ன குறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து கண்டறிந்து அவை அனைத்தையும் நீக்கி, நமக்கு அருள் செய்திடுவான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்

news

100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

news

டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!

news

தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்