திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் கருவறையில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. இன்றுதான் இதில் முக்கியமான நாள். காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்பட்டதும்தான் தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள்.

அந்த வகையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. பரணி நட்சத்திர நாளில் இந்தத் தீபம் ஏற்றப்படுவதால் இதற்கு பரணி தீபம் என்று பெயர் வந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு தினசரி மாலையில் வீடுகளில் விளக்கேற்றி வைப்பார்கள்.
இதைத் தொடர்ந்து அடுத்து மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை தீப மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. கிட்டத்தட்ட 2700 அடி உயரம் கொண்ட இந்த மலையில் இதற்காக ராட்சத கொப்பரையை நேற்றே வைத்து விட்டனர். கொட்டும் மழையிலும் இந்தப் பணி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு வருகின்றனர். மாலை மகா தீப தரிசனத்திற்காக அவர்கள் காத்துள்ளனர்.
மகா தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், பார்க்கிங் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முழுவதும் தீப ஒளியால் ஜொலித்துக் கொண்டுள்ளது. திருவண்ணாமலை நகரமும் கூட விழாக் கோலம் பூண்டுக் காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}