- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 19 திருவெம்பாவை பாசுரம் 19 : உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
திருவெம்பாவை பாசுரம் 19 :
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பொருள் :
உன் கையில் ஒப்படைக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என ஒரு தந்தை தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது மணமகனிடம் சொல்லுவது பழங்காலமாக சொல்லப்பட்டு வரும் மொழியாக இருந்து வருகிறது. அதனால் எங்களுக்கு வரப் போகும் கணவர் எப்படி இருப்பாரோ என்ற அச்சம் காரணமாக சிவ பெருமானே உன்னிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறோம். எங்களை மணம் முடிப்பவர் உன்னுடைய பக்தராக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் எனக்கு மட்டுமே தொண்டு செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவளாக இருக்க வேண்டும். எங்களின் பார்வையில் உனக்கு தொண்டு செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். அதை தவிர வேறு எதையும் எங்களின் கண்கள் பார்க்க கூடாது. இந்த பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாய் என்றால் அதற்கு பிறகு சூரியன் எந்த திசையில் உதித்தால் என்ன என எந்த கவலையும் இல்லாமல் நாங்கள் இருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}