- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 19 திருவெம்பாவை பாசுரம் 19 : உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
திருவெம்பாவை பாசுரம் 19 :
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பொருள் :
உன் கையில் ஒப்படைக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என ஒரு தந்தை தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது மணமகனிடம் சொல்லுவது பழங்காலமாக சொல்லப்பட்டு வரும் மொழியாக இருந்து வருகிறது. அதனால் எங்களுக்கு வரப் போகும் கணவர் எப்படி இருப்பாரோ என்ற அச்சம் காரணமாக சிவ பெருமானே உன்னிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறோம். எங்களை மணம் முடிப்பவர் உன்னுடைய பக்தராக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் எனக்கு மட்டுமே தொண்டு செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவளாக இருக்க வேண்டும். எங்களின் பார்வையில் உனக்கு தொண்டு செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். அதை தவிர வேறு எதையும் எங்களின் கண்கள் பார்க்க கூடாது. இந்த பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாய் என்றால் அதற்கு பிறகு சூரியன் எந்த திசையில் உதித்தால் என்ன என எந்த கவலையும் இல்லாமல் நாங்கள் இருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
{{comments.comment}}