- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 19 திருவெம்பாவை பாசுரம் 19 : உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
திருவெம்பாவை பாசுரம் 19 :
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பொருள் :
உன் கையில் ஒப்படைக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என ஒரு தந்தை தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது மணமகனிடம் சொல்லுவது பழங்காலமாக சொல்லப்பட்டு வரும் மொழியாக இருந்து வருகிறது. அதனால் எங்களுக்கு வரப் போகும் கணவர் எப்படி இருப்பாரோ என்ற அச்சம் காரணமாக சிவ பெருமானே உன்னிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறோம். எங்களை மணம் முடிப்பவர் உன்னுடைய பக்தராக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் எனக்கு மட்டுமே தொண்டு செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவளாக இருக்க வேண்டும். எங்களின் பார்வையில் உனக்கு தொண்டு செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். அதை தவிர வேறு எதையும் எங்களின் கண்கள் பார்க்க கூடாது. இந்த பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாய் என்றால் அதற்கு பிறகு சூரியன் எந்த திசையில் உதித்தால் என்ன என எந்த கவலையும் இல்லாமல் நாங்கள் இருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}