சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கொண்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை மரணமடைந்தார். 71 வயதான அந்த மக்கள் மனம் கவர்ந்த தலைவரின் மரணச் செய்தி அனைவரையும் உலுக்கியுள்ளது. விஜயகாந்த் உடல் முதலில் அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.. அதன் பின்னர் தேமுதிக தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்ததால் அந்த இடத்திலிருந்து பெரிய இடத்திற்கு விஜயகாந்த் உடஸலை மாற்றத் திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை விஜயகாந்த் உடல் தீவுத் திடலுக்கு மாற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உயர்த்தி வைக்கப்பட்ட மேடையில் விஜயகாந்த்தின் உடல் கிடத்தப்பட்டுள்ள பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கு அருகே மனைவி பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன்கள், மைத்துனர் ஆகியோர் சோகமே உருவாக அமர்ந்துள்ளனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு விஜயகாந்த்தின் உடல் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கும். பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தை அடையும். அங்கு மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் நல்லடக்கம் நடைபெறும். முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}