சென்னை: சென்னையில் வசித்து வரும் பல்வேறு மாவட்ட மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருவிழாக்களில் முதன்மையானது தைப் பொங்கல் திருநாள்தான். மொத்த மாநிலமும் பொங்கல் பண்டிகையை மிக மிக சந்தோஷமாக வரவேற்கக் காத்திருக்கும். இதற்குக் காரணம், இது தமிழர் திருநாள் என்பதோடு மட்டுமல்லாமல், மொத்த சொந்தங்களையும் இந்த சமயத்தில்தான் எளிதாக காண முடியும் என்பதும் ஒன்று.

எந்தத் திருவிழாவுக்கு ஒன்று சேருகிறார்களோ இல்லையோ, பொங்கல் சமயத்தில் உறவுகள் ஒன்று கூட விரும்புவார்கள். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அங்காளி, பங்காளி என்று அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட விரும்பும் பண்டிகை பொங்கல்தான். கிராமங்கள் களை கட்டியிருக்கும். நகரங்களிலும் கூட பொங்கல் பண்டிகை இப்போதெல்லாம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் சமயத்தில் சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்தமுறை ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்திருப்பதால் மக்கள் நேற்று முதலே கிளம்பத் தொடங்கி விட்டனர். நேற்று மாலைக்கு மேல் மக்கள் கூட்டம் திமுதிமுவென தேசிய நெடுஞ்சாலையில் படையெடுக்கத் தொடங்கியதால் தேசிய நெடுஞ்சாலையே ஜே ஜேவென காணப்பட்டது. கார்கள்தான் வழக்கம் போல அதிகமாக காணப்பட்டன.
நேற்று முதல் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதால் பஸ்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. ஆம்னி பஸ்களும் அதிகம் இயக்கப்படுகின்றன. இன்று காலையிலிருந்தே தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்வோர், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்குச் செல்வோர் என்று ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளதால் சென்னையில் வரும் புதன்கிழமை வரை கூட்ட நெரிசல் குறைந்து மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்து காணப்படும். சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களே பார்த்து பத்திரமாக ஊருக்குப் போய்ட்டு வாங்க.. சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடி விட்டு ஜம்மென்று திரும்பி வாங்க.. உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கு சென்னை!
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}