மீண்டும் நீலகிரியில் வேட்டை .. 4 மாதமாக ஆட்டம் காட்டி வந்த புலி சிக்கியது!

Dec 03, 2025,02:45 PM IST

- சரளா ராம்பாபு 


ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த 4 மாதமாக ஆட்டம் காட்டி வந்த புலி சிக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அவ்வப்போது வன விலங்குகளின் அட்டகாசம் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோலத்தான் கடந்த 4 மாதமாக ஒரு புலி போக்கு காட்டி வந்தது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.


கூடலூர் அருகே உள்ள தேவர் சோலா மற்றும் பாடந்துறை போன்ற பகுதிகளில் புலியின் அச்சுறுத்தல் நீடித்து வந்தது. 4 மாதங்களில் 13 மாடுகளை அந்தப் புலி வேட்டையாடி உள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.




இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. போக்கு காட்டி வந்த அந்தப் புலி தற்போது கூண்டில் சிக்கியது. இருந்தாலும் இது நான்கு மாதமாக போக்கு காட்டி வந்த பழைய புலியா அல்லது புதுப் புலியா என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்துள்ளது.


தொடர் புலி அச்சத்திற்கு ஏதாவது நிரந்தரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கையும் மக்களிடம் எழுந்துள்ளது.


(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!

news

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

அதிகம் பார்க்கும் செய்திகள்