- சரளா ராம்பாபு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த 4 மாதமாக ஆட்டம் காட்டி வந்த புலி சிக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அவ்வப்போது வன விலங்குகளின் அட்டகாசம் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோலத்தான் கடந்த 4 மாதமாக ஒரு புலி போக்கு காட்டி வந்தது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
கூடலூர் அருகே உள்ள தேவர் சோலா மற்றும் பாடந்துறை போன்ற பகுதிகளில் புலியின் அச்சுறுத்தல் நீடித்து வந்தது. 4 மாதங்களில் 13 மாடுகளை அந்தப் புலி வேட்டையாடி உள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. போக்கு காட்டி வந்த அந்தப் புலி தற்போது கூண்டில் சிக்கியது. இருந்தாலும் இது நான்கு மாதமாக போக்கு காட்டி வந்த பழைய புலியா அல்லது புதுப் புலியா என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்துள்ளது.
தொடர் புலி அச்சத்திற்கு ஏதாவது நிரந்தரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கையும் மக்களிடம் எழுந்துள்ளது.
(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}