சென்னை: சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான சப்தகிரி மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதுவும் இது கோடை காலம் என்பதால், தொடர் விடுமுறையினை முன்னிட்டு மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பி வருகின்றனர்.
இந்நிலையில்,சென்னையில் இருந்து திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக வரும் 31ம் தேதி வரை திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16057) வருகிற 31ம் தேதி வரை தேதி வரை ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் (16058) திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16053) வருகிற 31ம் தேதி வரை ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், திருப்பதியில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16054) திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}