ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய அவர் தயாராக இருக்கிறாரா என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் சார்பில் சவால் விடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடுக்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் புனிதமானதாகும். உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு குறித்து சமீப காலமாக அதிக அளவில் வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டு வந்தது. இதனால் லட்டில் முறைகேடு நடப்பதையும், கள்ளச்சந்தைகளில் திருப்பதி லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதையும் தடுப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் லட்டு தயாரிப்பிற்காக நெய்யிக்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களிடம் இருந்து வெங்கடேஷ்வர சுவாமியின் புனிதத்தை நாங்கள் காத்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.
ஒரு மாநிலத்தின் முதல்வரே, புகழ்பெற்ற திருப்பதி தலத்தில் வழங்கப்படும் பிரசாதம் குறித்து இப்படி ஒரு தகவலை தெரிவித்திருப்பது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஏழுமலையான் பக்தர்கள் இதை கேட்டு குழப்பமடைந்தனர். சந்திரபாபு நாயுடுவின் கருத்திற்கு இதுவரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் எந்த பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. ஆனால் 24 மணி நேரத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் எம்.பி., ஒருவர் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு கூறிய தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், சந்திரபாபு நாயுடு அவர்கள் கட்சியின் தோல்வியை மறைப்பதற்காக தான் புனிதமான திருப்பதி கோவில் பிரசாதம் பற்றி இப்படி ஒரு பொய்யான தகவலை கூறி உள்ளார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த தோல்வியை மறைக்க, திசை திருப்ப தான் இப்படி ஒரு பொய்யை சொல்லி உள்ளார்.
திருப்பதி கோவில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது உண்மை தான் என்றால், திருப்பதிக்கு சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? தங்களின் தவறுகளை மறைப்பதற்காக சந்திரபாபு நாயுடு இப்படி தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறுவார் என நினைக்கவில்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}