Tirupati.. 2024ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த.. 2.25 கோடி பக்தர்கள்!

Jan 02, 2025,06:45 PM IST

திருப்பதி: 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 2.55 கோடி பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. திருப்பதி ஏழுமலையனை தரிசனம் செய்ய தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தொடர் விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அப்போது  பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு வருகிறது. 




பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென  தங்கம், வெள்ளி, பணம், முடியென, காணிக்கைகளாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.  கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் புது வருட பிறப்பான ஜனவரி ஒன்று வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தத் தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் 2024 ஆம் ஆண்டில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2.55 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். இதில் ஒரு கோடியே 365 கோடி பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை செலுத்தி உள்ளனர். குறிப்பாக 90 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை அளித்துள்ளனர் என அறிவித்துள்ளது.


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன் சேவை பதிவு கட்டணம் ரத்து செய்யப்படுவது வழக்கம். அதாவது வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் எத்தனை நாள் திறக்கிறதோ அத்தனை நாட்கள் பக்தர்கள் அனைவருக்கும் பொது தரிசனம் சேவை மட்டுமே வழங்கப்படுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வருடம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஆனால் எத்தனை நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.  பக்தர்கள் அனைவருக்கும் முன் சேவை கட்டணமில்லாத பொது தரிசன சேவை உண்டா என்பது குறித்த விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!

news

மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

news

Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்

news

இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்