என்னடா வேற மாதிரி நாறுது.. கஞ்சா என்று கூறி.. மாட்டுச் சாணியை விற்ற பலே கேடிகள்!

May 03, 2024,04:13 PM IST

திருப்பூர்:  திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா என கூறி ஏமாற்றி விற்ற இருவர் மற்றும் அதனை வாங்கியவர் இருவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை பலகுடோன் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவிலரில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடந்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூறியதில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இருவரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில் இருவரும் உண்மையை கக்கினர்.




இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், கோவையில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா வாங்குவதற்காக வந்த லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் கஞ்சாவிற்கு பதில் மாட்டுச் சாணம் இருந்தது தெரியவந்தது.  அதாவது மாட்டுச் சாணியை கஞ்சா என்று இவர்கள் வாங்கியுள்ளனர்.  இந்த போலி கஞ்சாவை  கிலோ ரூ. 33,000 கொடுத்து வாங்கியது தெரியவந்தது.


யாரிடமிருந்து இவர்கள் கஞ்சா வாங்கினர் என்று போலீஸார் கேட்டபோது, திருப்பூர் கேவிஆர் நகர் பகுதியில் இருந்தவந்த கவின் மற்றும் சாரதி தான் இதை தங்களிடம் கஞ்சா என கூறி விற்று சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து கவின் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். நூதன முறையில் மாட்டுச் சாணத்தை கஞ்சா எனக்கூறி விற்றதாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல கஞ்சாவை வாங்கியவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்