என்னடா வேற மாதிரி நாறுது.. கஞ்சா என்று கூறி.. மாட்டுச் சாணியை விற்ற பலே கேடிகள்!

May 03, 2024,04:13 PM IST

திருப்பூர்:  திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா என கூறி ஏமாற்றி விற்ற இருவர் மற்றும் அதனை வாங்கியவர் இருவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை பலகுடோன் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவிலரில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடந்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூறியதில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இருவரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில் இருவரும் உண்மையை கக்கினர்.




இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், கோவையில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா வாங்குவதற்காக வந்த லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் கஞ்சாவிற்கு பதில் மாட்டுச் சாணம் இருந்தது தெரியவந்தது.  அதாவது மாட்டுச் சாணியை கஞ்சா என்று இவர்கள் வாங்கியுள்ளனர்.  இந்த போலி கஞ்சாவை  கிலோ ரூ. 33,000 கொடுத்து வாங்கியது தெரியவந்தது.


யாரிடமிருந்து இவர்கள் கஞ்சா வாங்கினர் என்று போலீஸார் கேட்டபோது, திருப்பூர் கேவிஆர் நகர் பகுதியில் இருந்தவந்த கவின் மற்றும் சாரதி தான் இதை தங்களிடம் கஞ்சா என கூறி விற்று சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து கவின் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். நூதன முறையில் மாட்டுச் சாணத்தை கஞ்சா எனக்கூறி விற்றதாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல கஞ்சாவை வாங்கியவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்