- ஸ்வர்ணலட்சுமி
திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுவது அனைவருக்கும் தெரியும். இது சிவபெருமானின் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்துவதற்காக ஏற்றப்படுவதாகும். பரணி தீபத்தன்று ஐந்து தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். இத சிவ பெருமானின் காத்தல், அழித்தல், படைத்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து முகங்களின் குணங்களையும், ஐந்து தொழில்களையும் குறிப்பதாகவும் சொல்லப்படுவது உண்டு.
அதனால் தான் சிவபெருமானை நினைத்து நாம் 5 மண் அகல் தீபங்களை நம்முடைய வீடுகளின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது.
பரணி தீபம் பலன்கள் :
நாம் எதையும் காரண காரியம் இல்லாமல் செய்ய மாட்டோம் இல்லையா? அதனால் பரணி தீபம் ஏற்றுவதால் நம் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். நமக்கும் அதீத நன்மை கிடைக்கும். நம் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை உண்டாகும்.
பரணி தீபம் ஏற்றும் முறை :
பஞ்ச பூத நலன்களை தரும் இந்த பரணி தீபத்தின் 5 தீபங்களில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாலம் எடுத்து அதில் கோலமிட்டு, அனைத்து திசைகளையும் பாத்தபடி வட்டமாக பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளுடன் தனியாக இந்த 5 தீபங்களையும் ஏற்ற வேண்டும்.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று,அதாவது திருக்கார்த்திகை திருநாளுக்கு முந்தைய நாள் வீடுகளில் ஏற்றப்படுவதே பரணி தீபம் ஆகும். இந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 08.20 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 06.50 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. எனவே டிசம்பர் 12ம் தேதியன்று மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளில் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.
சிலர் வீடுகளில் அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வீட்டில் வாசல், ஹால், பூஜை அறை, வீட்டின் பின்புறம் என அனைத்து இடங்களிலும் ஏற்றலாம். ஆனால் குறைந்த பட்சம் 5 தீபங்கள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}