- ஸ்வர்ணலட்சுமி
திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுவது அனைவருக்கும் தெரியும். இது சிவபெருமானின் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்துவதற்காக ஏற்றப்படுவதாகும். பரணி தீபத்தன்று ஐந்து தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். இத சிவ பெருமானின் காத்தல், அழித்தல், படைத்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து முகங்களின் குணங்களையும், ஐந்து தொழில்களையும் குறிப்பதாகவும் சொல்லப்படுவது உண்டு.
அதனால் தான் சிவபெருமானை நினைத்து நாம் 5 மண் அகல் தீபங்களை நம்முடைய வீடுகளின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது.
பரணி தீபம் பலன்கள் :
நாம் எதையும் காரண காரியம் இல்லாமல் செய்ய மாட்டோம் இல்லையா? அதனால் பரணி தீபம் ஏற்றுவதால் நம் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். நமக்கும் அதீத நன்மை கிடைக்கும். நம் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை உண்டாகும்.
பரணி தீபம் ஏற்றும் முறை :
பஞ்ச பூத நலன்களை தரும் இந்த பரணி தீபத்தின் 5 தீபங்களில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாலம் எடுத்து அதில் கோலமிட்டு, அனைத்து திசைகளையும் பாத்தபடி வட்டமாக பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளுடன் தனியாக இந்த 5 தீபங்களையும் ஏற்ற வேண்டும்.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று,அதாவது திருக்கார்த்திகை திருநாளுக்கு முந்தைய நாள் வீடுகளில் ஏற்றப்படுவதே பரணி தீபம் ஆகும். இந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 08.20 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 06.50 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. எனவே டிசம்பர் 12ம் தேதியன்று மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளில் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.
சிலர் வீடுகளில் அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வீட்டில் வாசல், ஹால், பூஜை அறை, வீட்டின் பின்புறம் என அனைத்து இடங்களிலும் ஏற்றலாம். ஆனால் குறைந்த பட்சம் 5 தீபங்கள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}