சென்னை: சென்னை டூ திருவண்ணாமலைக்கு இடையே 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பாசஞ்சர் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெடு நாட்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்ற தெற்கு ரயில்வே, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவையை தொடங்கியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.
இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை டூ திருவண்ணாமலை செல்லும் இந்த சிறப்பு ரயிலுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}