சென்னை: சென்னை டூ திருவண்ணாமலைக்கு இடையே 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பாசஞ்சர் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெடு நாட்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்ற தெற்கு ரயில்வே, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவையை தொடங்கியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.
இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை டூ திருவண்ணாமலை செல்லும் இந்த சிறப்பு ரயிலுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}