திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?

Mar 03, 2026,06:17 PM IST

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (மார்ச் 3, 2026) இது குறித்த அதிகாரப்பூர்வமான அல்லது மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நேற்று இரவு டெல்லி காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் தொலைபேசி வாயிலாக ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சேர்க்கப்படவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது கட்சிக்குள்ளான உட்கட்சிப் பூசலா அல்லது மேலிடத்தின் நேரடித் திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.




திமுக தரப்பில் கடந்த முறையைப் போலவே 25 இடங்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் 35 முதல் 40 இடங்கள் வரை கோரப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 5-ம் தேதி ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், அதற்குள் ஒரு முடிவை எட்ட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் தங்களுக்கு ஒரு எம்.பி., சீட் என்பது முக்கியமல்ல ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் உறுதியாக உள்ளதாம்.


இதற்கு முன்பு வரை திமுக கொடுத்த சீட்டுகளை மட்டும் காங்கிரஸ் பெற்று வந்தது. ஆனால் தற்போது திமுக அரசு மீதான எதிர்ப்புகள், அதிமுக.,வின் வலுவான கூட்டணி, கடந்த கால தேர்தல் நிலவரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, நாம் இல்லை என்றால் திமுக.,வால் வெற்றி பெற முடியாது. நாம் தான் திமுக.,வின் பலமே என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டு விட்டது. இந்த கருத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கும் தமிழக தலைவர்கள் தெரியப்படுத்தி விட்டனர். 


தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால், விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுவது திமுக தலைமைக்கு ஒருவித அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இருப்பினும், "சமூக நீதி" என்ற கருத்தியல் ரீதியாகத் தங்களை விட்டு காங்கிரஸ் செல்லாது என்பதில் திமுக நம்பிக்கையுடன் உள்ளது. இதனால் தவெக உடன் பேச்சுவார்த்தை நடப்பதை காங்கிரஸ் தலைவர்கள் மறுக்கவில்லை. அதோடு திமுக.,விடம் அதிக சீட் பெறுவதற்கும், தங்களின் பலத்தை காட்டவும் காங்கிரஸ், தவெக உடனான பேச்சை பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


அதேசமயம், விசிக (VCK) போன்ற மற்ற கூட்டணிக் கட்சிகளும் கூடுதல் இடங்களைக் கோரி வருவதால், கூட்டணியைச் சிதறாமல் கொண்டு செல்வதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. இன்றைய முடிவைப் பொறுத்தே 2026 தேர்தலின் பலப்பரீட்சை யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது ஓரளவிற்குத் தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்