சென்னை : சட்டசபையில் கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என கவர்னர் மாளிகை வெளியிட்ட தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தும் போது பல முறை அவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கவர்னர் ரவி, உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு, சட்டசபையில் இருந்து வெளியேறினார். பிறகு சட்டசபையில் என்ன நடந்தது, எதற்காக கவர்னர் அவையில் இருந்து வெளியேறினார் என விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, "அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா?"
அரசு தயாரித்து கொவுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் இவ்வாறு உரையை வாசிக்காமல் செல்ல முடியுமா? கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என கூறி இருந்தார். கவர்னர் மாளிகையின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ரகுபதியும், கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். கவர்னர் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது. பாஜக பிரதிநிதி போல கவர்னர் செயல்பட்டார். எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறுகிறார், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி பற்றி கவர்னர் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது என சட்டசபை வளாகத்தில் பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
நெற்றிக்கண் திறப்பினும்....!
வசந்த பஞ்சமி 2026.. சரஸ்வதி தேவியை வழிபடுவோம்.. ஞானம் பெறுவோம்
{{comments.comment}}