கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

Jan 20, 2026,05:14 PM IST

சென்னை : சட்டசபையில் கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என கவர்னர் மாளிகை வெளியிட்ட தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.


தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தும் போது பல முறை அவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கவர்னர் ரவி, உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு, சட்டசபையில் இருந்து வெளியேறினார். பிறகு சட்டசபையில் என்ன நடந்தது, எதற்காக கவர்னர் அவையில் இருந்து வெளியேறினார் என விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  




இந்நிலையில் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, "அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா?"


அரசு தயாரித்து கொவுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் இவ்வாறு உரையை வாசிக்காமல் செல்ல முடியுமா? கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என கூறி இருந்தார். கவர்னர் மாளிகையின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ரகுபதியும், கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். கவர்னர் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது. பாஜக பிரதிநிதி போல கவர்னர் செயல்பட்டார். எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறுகிறார், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி பற்றி கவர்னர் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது என சட்டசபை வளாகத்தில் பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்