சென்னை : நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பி விட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதற்கிடையில் நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதாக அவற்றில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ள அபாய உச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அபரிமிமாக வரும் உபரி நீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பிவிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது, தாமிரபரணி - கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டும் செல்லும் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது அபரிமிதமாக வரும் வெள்ள நீரை வீணடிக்காமல் இந்த சோதனை ஓட்டத்தை நடத்த அதிகாரிகள் தற்போது திட்டமிட்டுள்ளனர்.
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
உழைப்பின் உயர்வு (கவிதை)
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
{{comments.comment}}