பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Jan 10, 2024,06:42 PM IST

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று (ஜனவரி 09) அறிவித்திருந்த நிலையில், இன்று (ஜனவரி 10) காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட தமிழக அரசு சார்பில் பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஜனவரி 02ஆம் தேதி அரசு ஊழியர்கள், பொது துறையில் பணிபுரிவோர் , வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், ஆகியோர் நீங்கலாக ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு 1000 ரூபாய் பொங்கல் பரிசு உடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு என அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்  என  நேற்று அறிவித்தது.




கடந்த மூன்று நாட்களாக இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை அடுத்து இன்று காலை 10 மணி அளவில் அனைத்து ரேஷன் கடைகளிலும்  பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டை சீதா அம்மாள் காலனியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட  தேதிகளில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை அவர்களுக்குரிய ரேஷன் கடையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்