Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

May 02, 2026,05:02 PM IST

சென்னை: தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நிறைவடைந்தது. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்களது தேர்தல் 'வார் ரூம்களை' அதிநவீன வசதிகளுடன் வலுப்படுத்தி வருகின்றன.வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் கடைசி நேரச் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சவால்களை உடனுக்குடன் கையாள்வதே இந்த வார் ரூம்களின் முக்கிய நோக்கமாகும்.


வார் ரூம்களின் செயல்பாடுகள்:


இந்திய தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் உடனுக்குடன் கண்காணிக்க இரு கட்சிகளும் பிரத்யேகக் குழுக்களை அமைத்துள்ளன. இக்குழுக்கள் வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் முகவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பார்கள்.


இது குறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், "தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (RO), மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் தொடர்பு எண்கள் எங்களுடைய வார் ரூமில் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் சட்ட ரீதியான சிக்கலோ அல்லது முறைகேடுகளோ நடந்தால், அந்தந்த பகுதி முகவர்கள் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உடனடியாக உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்போம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்ட நிபுணர்கள் நியமனம்:




திமுக தரப்பும் தங்களது வார் ரூமை மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது எழும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை திமுக நியமித்துள்ளது. ஏதேனும் ஒரு சுற்றில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டாலோ அல்லது மறுவாக்கு எண்ணிக்கை கோர வேண்டிய சூழல் வந்தாலோ, அதைச் சட்டப்படி எப்படி அணுகுவது என்பதற்கான ஆலோசனைகளை இந்த வார் ரூம் வழங்கும்.


ஏன் இந்த முன்னெச்சரிக்கை?

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பல தொகுதிகளில் வெற்றி-தோல்வி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. குறிப்பாக 1,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் பல இடங்கள் தீர்மானிக்கப்பட்டன. இம்முறை 2026 தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுவதால், பல தொகுதிகளில் கடும் போட்டி இருக்கும் என்றும், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய கட்சிகளின் வருகை மற்றும் வாக்குகள் சிதறும் வாய்ப்பு இருப்பதால், வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்று வரை விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இரு கட்சிகளும் உணர்ந்துள்ளன. இதன் காரணமாகவே, வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு நிமிடத்தையும் கண்காணிக்க 'வார் ரூம்கள்' போர் மேகம் போல் தயாராகி வருகின்றன.மே 4-ஆம் தேதி காலை 8 மணி முதல் இந்த வார் ரூம்கள் முழு வீச்சில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

அதிகம் பார்க்கும் செய்திகள்