அரசு ஊழியர் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போகிறார்களா.. தீயாய் பரவிய வதந்தி.. பரப்பியது யார்?

Aug 11, 2024,10:50 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போவதாக நேற்று மாலை திடீரென ஒரு செய்தி வாட்ஸ் ஆப்களில் பரவியது. ஆனால் அது வதந்தி என்று தற்போது தெரிய வந்துள்ளது.


தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்தது. கொரோனா வந்ததற்குப் பிறகு இந்த ஓய்வு வயதானது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதுவே அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறையும், 60 வயது வரை அனைவராலும் திறம்பட பணியாற்ற முடியாது, பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக இது கூறப்பட்டது. இருப்பினும் இந்த உத்தரவு தற்போது வரை நீடிக்கிறது.


60 வயது வரை ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் தற்போது அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்தக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது. வாட்ஸ் ஆப்களில் இது காட்டுத் தீ போல பரவியது. பெரும்பாலும் குரூப்களில்தான் அதிகம் இது பரப்பப்பட்டது. 




இது முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது கூறுகையில், இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்தத் தீர்மானமும்  நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் தெரிவித்துள்ளது.


வதந்தி கிளப்பியது யார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்