தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை வெளியீடு

Dec 10, 2023,05:48 PM IST
சென்னை : தமிழகம் முழுவதும் நாளை துவங்குவதாக இருந்த அரையாண்டு தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு புதன்கிழமை தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்த நிலையில் தற்போது புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 04 ம் தேதி மிச்சாங் புயலாக உருவெடுத்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களையே புரட்டி போட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு வாரம் ஆகியும் இன்னும் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. வெள்ளச் சேதம் ரூ.4000 கோடிக்கும் மேல் என கணக்கிடப்பட்டுள்ளது. 




பல பகுதிகளில் ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். பள்ளிகள் பலவற்றிலும் வெள்ள நீர் தேங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 


ஆனால் வங்கடக்கடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்தத்தால் நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்னும் 5 நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தொடர்ந்து மழை பெய்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் டிசம்பர் 11 ம் தேதியான நாளை துவங்க இருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் மேலும் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். புதன்கிழமை தேர்வுகள் தொடங்கும் என்றும் புதிய கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.


இந்தநிலையில் தற்போது புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 6 முதல் 12ம் வகுப்பு வரைக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதியில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்