சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் பழுது குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்யவும், பழுதுகறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
48 மணி நேரத்தில் ஆய்வு செய்ததில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்து அறிக்கை அனுப்பவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் முருகேசன் (54) ஓட்டிச் சென்றார். அப்போது பேருந்து ஒரு வளைவில் திரும்பும் போது இருக்கையுடன் முருகேசன் வெளியே வந்து விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதேபோல சமீபத்தில் ஒரு அரசுப் பேருந்தின் படிக்கட்டு முழுமையாக கழன்று விழுந்தது. அதை அந்தப் பஸ்சின் கண்டக்டர் கஷ்டப்பட்டு தூக்கிச் சென்று சரி செய்த புகைப்படம், வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. இப்படி அடிக்கடி பல்வேறு புகார்கள் எழுகின்றன. தமிழக அரசு அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது வந்தது.
இதுதவிர அரசு பேருந்துகளில் சீட்டுகள், படிக்கட்டுகள் உட்பட முறையாக பராமரிக்கவில்லை என தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்த நிலையில் தமிழக அரசு பேருந்துகள் முறையாக ஆய்வு செய்வது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் பனீர் ரெட்டி மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் நேற்று சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து பேருந்துகளும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.48 மணி நேரத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் ஏதும் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும், ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}