சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் பழுது குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்யவும், பழுதுகறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
48 மணி நேரத்தில் ஆய்வு செய்ததில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்து அறிக்கை அனுப்பவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் முருகேசன் (54) ஓட்டிச் சென்றார். அப்போது பேருந்து ஒரு வளைவில் திரும்பும் போது இருக்கையுடன் முருகேசன் வெளியே வந்து விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதேபோல சமீபத்தில் ஒரு அரசுப் பேருந்தின் படிக்கட்டு முழுமையாக கழன்று விழுந்தது. அதை அந்தப் பஸ்சின் கண்டக்டர் கஷ்டப்பட்டு தூக்கிச் சென்று சரி செய்த புகைப்படம், வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. இப்படி அடிக்கடி பல்வேறு புகார்கள் எழுகின்றன. தமிழக அரசு அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது வந்தது.
இதுதவிர அரசு பேருந்துகளில் சீட்டுகள், படிக்கட்டுகள் உட்பட முறையாக பராமரிக்கவில்லை என தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்த நிலையில் தமிழக அரசு பேருந்துகள் முறையாக ஆய்வு செய்வது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் பனீர் ரெட்டி மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் நேற்று சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து பேருந்துகளும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.48 மணி நேரத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் ஏதும் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும், ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}