சொந்த ஊர் செல்ல பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு...

Dec 31, 2023,05:32 PM IST


சென்னை : புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.


இதன் படி, அரசு விரைவு பஸ்களில் கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து செல்வதற்கு முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும். 


சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். டிசம்பர் 31ம் தேதியில் இருந்து ஜனவரி 30 வரை சொந்த ஊர் செல்வதற்கு பஸ் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.




விழுப்புரம், கும்பகோணம் மற்றம் சேலம் செல்லும் பஸ்கள் ஜனவரி 15ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், இன்று உடனடியாக வெளியூர் செல்லும் பஸ்களின் இயக்கம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்