சென்னை : புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
இதன் படி, அரசு விரைவு பஸ்களில் கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து செல்வதற்கு முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். டிசம்பர் 31ம் தேதியில் இருந்து ஜனவரி 30 வரை சொந்த ஊர் செல்வதற்கு பஸ் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம், கும்பகோணம் மற்றம் சேலம் செல்லும் பஸ்கள் ஜனவரி 15ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், இன்று உடனடியாக வெளியூர் செல்லும் பஸ்களின் இயக்கம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}