சென்னை : புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
இதன் படி, அரசு விரைவு பஸ்களில் கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து செல்வதற்கு முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். டிசம்பர் 31ம் தேதியில் இருந்து ஜனவரி 30 வரை சொந்த ஊர் செல்வதற்கு பஸ் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கும்பகோணம் மற்றம் சேலம் செல்லும் பஸ்கள் ஜனவரி 15ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், இன்று உடனடியாக வெளியூர் செல்லும் பஸ்களின் இயக்கம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}