தர்மபுரி: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் புதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் மாணவர்களின் தனித்திறமையை வெளிக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசு தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டிகள் வரும் 20.8.2024 மற்றும் 21.8.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும் எனவும் மேலும், போட்டியில் வெல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக மாவட்ட ஆட்சியர் சார்பில் ரூ.2000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}