சென்னை : தமிழகத்தில் உள்ள மிக பழமையான, 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையான, பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த 65 கோவில்களில் ஜூலை 12ம் தேதியான நாளை ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் இத்தனை பழமையான கோவில்களிலும் கும்பாபிஷேகமா என பலரும் ஆச்சரியம் தெரிவத்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஒரு நல்ல காரணம் பின்னணியில் உள்ளது.
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை தமிழகத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜபெருமாள் கோவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான தக்கோலம் கங்காதீசுவரர் கோவில், நெல்லை மாவட்டத்தில் 123 ஆண்டுகள் பழமையான அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சாமி கோவில், வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்கு பழமையான் வெட்டுவானம் திரவுபதியம்மன் கோவில், சங்ககிரி செளந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில்,100 ஆண்டுகள் பழமையான 5 கோவில்களிலும், 90 ஆண்டுகள் பழமையான 3 கோவில்கள், 70 ஆண்டுகள் பழமையான 2 கோவில்கள், 50 ஆண்டுகள் பழமையான 15 கோவில்கள், 40 ஆண்டுகள் பழமையான 10 கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
ஜூலை 12 ம் தேதி இத்தனை கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் வெள்ளிக்கிழமை என்பதால் கிடையாதாம். ஜூலை 12ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த, தெய்வீக சக்தி வாய்ந்த நாளாகும். இது ஆனி மாதம் உத்திர நட்சத்திரமும் சஷ்டி திதியும் இணைந்து வரும் நாளாகும். ஆனி மாத உத்திரத்தில் தான் சிவ பெருமானின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரூபமான ஆடல் அரச பெருமானான, சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேகம் நடத்தப்படும். நடராஜருக்கு நடத்தப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த அபிஷேகங்களில் ஒன்று ஆனி மாத உத்திரத்தில் நடத்தப்படுவது.
தேவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாளாக ஆனி உத்திரம் கருதப்படுவதால், தெய்வ அபிஷேகங்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் இந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடுவார்கள் என்பது ஐதீகம். இதனால் அங்கு கூடுபவர்களுக்கு சிவன், முருகன், தேவர்கள் ஆகிய அனைவரின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் இந்த நல்ல நாளில் இத்தனைக் கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}