Aani Thirumanjanam: பழமையான 65 கோவில்களில் நாளை ஒரே நாளில் கும்பாபிஷேகம்... இது தான் காரணமா?

Jul 11, 2024,06:54 PM IST

சென்னை :   தமிழகத்தில் உள்ள மிக பழமையான, 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையான, பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த 65 கோவில்களில் ஜூலை 12ம் தேதியான நாளை ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 


ஒரே நாளில் இத்தனை பழமையான கோவில்களிலும் கும்பாபிஷேகமா என பலரும் ஆச்சரியம் தெரிவத்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஒரு நல்ல காரணம் பின்னணியில் உள்ளது.




தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை தமிழகத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜபெருமாள் கோவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான தக்கோலம் கங்காதீசுவரர் கோவில், நெல்லை மாவட்டத்தில் 123 ஆண்டுகள் பழமையான அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சாமி கோவில், வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்கு பழமையான் வெட்டுவானம் திரவுபதியம்மன் கோவில்,  சங்ககிரி செளந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில்,100 ஆண்டுகள் பழமையான 5 கோவில்களிலும், 90 ஆண்டுகள் பழமையான 3 கோவில்கள், 70 ஆண்டுகள் பழமையான 2 கோவில்கள், 50 ஆண்டுகள் பழமையான 15 கோவில்கள், 40 ஆண்டுகள் பழமையான 10 கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.


ஜூலை 12 ம் தேதி இத்தனை கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் வெள்ளிக்கிழமை என்பதால் கிடையாதாம்.  ஜூலை 12ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த, தெய்வீக சக்தி வாய்ந்த நாளாகும். இது ஆனி மாதம் உத்திர நட்சத்திரமும் சஷ்டி திதியும் இணைந்து வரும் நாளாகும். ஆனி மாத உத்திரத்தில் தான் சிவ பெருமானின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரூபமான ஆடல் அரச பெருமானான, சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேகம் நடத்தப்படும். நடராஜருக்கு நடத்தப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த அபிஷேகங்களில் ஒன்று ஆனி மாத உத்திரத்தில் நடத்தப்படுவது.


தேவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாளாக ஆனி உத்திரம் கருதப்படுவதால், தெய்வ அபிஷேகங்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் இந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடுவார்கள் என்பது ஐதீகம். இதனால் அங்கு கூடுபவர்களுக்கு சிவன், முருகன், தேவர்கள் ஆகிய அனைவரின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் இந்த நல்ல நாளில் இத்தனைக் கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்