சென்னை: தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது. யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கொரோனாவைரஸ் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் வைரஸ் வகையானது, எளிதில் தொற்றக் கூடியது. பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்துவதாக இது இல்லை. எனவே இந்த வகையான தொற்று ஏற்பட்டால் சில நாட்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, ஜலதோஷம் உள்ளிட்டவை இருக்கும். உரிய மருந்துகளை எடுத்துக் கொண்டால் சரியாக விடுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா பரவல் அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில், தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1800க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்ப கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றம் அடைந்து வந்ததன் காரணமாகத் தான் 2023 மே 5ஆம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது. தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்த ஆய்வில் இவை வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் என்பது உறுதியாகி உள்ளது. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் ஒரு சுற்று அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுருத்தி உள்ளது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது பதற்றம் வேண்டாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து கொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால் மாஸ்க அணிவது நல்லது. இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்பான மருத்துவமனை கட்டமைப்பு உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் தயாராக உள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தல் வழக்கமான ஒன்றுதான். பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா தொடர்பான வதந்திகள் தான் மிகப்பெரிய நோய். இந்த வதந்திகளை கிளப்பாமல் இருப்பது நல்லது. சென்னையில் கொரோனாவால் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த முதியவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்தன என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி.. செம்மொழி நாளாக கொண்டாடுவோம்.. திமுக தீர்மானம்
திமுகவுக்கு நன்றி.. 2026 தேர்தலையொட்டி எங்களது நகர்வுகள் இருக்கும்.. பிரேமலதா பரபரப்பு பேட்டி
ராஜ்யசபா தேர்தல்..தேமுதிகவுக்கு சீட் இல்லை.. 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!
நள்ளிரவில் கால்வாயை பார்வையிட்டு நாடகமா.. மதுரை மக்கள் என்ன முட்டாள்களா?.. அண்ணாமலை
எடப்பாடி பழனிச்சாமி குறித்து இயல்பை மீறி பேசி விட்டேன்.. வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஆதவ் அர்ஜூனா
மாற்றுத் திறனாளிகள் மற்றும் கல்வியாளர்கள்.. திமுகவில் மேலும் 2 புதிய அணிகள் அறிவிப்பு!
நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!
கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!
தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
{{comments.comment}}