சென்னை: தமிழ்நாடு முழுவதும் 90 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் குரூப்-1, குரூப் 2, 2ஏ,குரூப் 4, உள்ளிட்ட தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி டி என் பி எஸ் சி நிறுவனம் வெளியிட்டது. இதில் துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்புத்துறை அதிகாரி, உள்ளிட்ட மொத்தம் 90 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இன்று தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. 300 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளில், பொது அறிவு பாடத்தில் 175 கேள்விகளும், நுண்ணறிவு திறனில் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும்.
தமிழ்நாடு முழுவதும் இந்த குரூப் ஒன் தேர்வு 797 மையங்களில் நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை 2, 38,247 பேர் எழுதுகின்றனர். இதில் 1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 20 பேரும் அட்கம்.
குரூப்-1 எழுத்துத் தேர்வை தொடர்ந்து முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
{{comments.comment}}