சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 2ஏ தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேவையான திறமையான ஊழியர்களை கண்டறிய அரசு பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகளில் ஒன்று குரூப் 2 தேர்வு. சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நேர்காணல் அடிப்படையில் நிரப்படும்.

நேர்முக தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்படுகின்றன.
டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப் 2 பதவிகளின் 116 இடங்களுக்கும், குரூப் 2ஏ பதிவிளில் 5,990 இடங்களுக்குமான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 11 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத விண்ணப்பித்தனர். அதில் 9,94,890 பேர் தேர்வு எழுதினார்கள்.தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.
குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் ஜனவரி 12, 2024ல் வெளியிடப்பட்டது. 2ஏ தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தான் தேர்வாணையம் முடிவுகளை வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று நேர்காணல் இல்லாத குரூப்2 ஏ பதவிகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}