டிஎன்பிஎஸ்சி குரூப் 5 அறிவிப்பு வந்தாச்சு.. சட்டுப்புட்டுன்னு சீக்கிரம் அப்ளிகேஷனை போடுங்க!

Oct 18, 2024,04:46 PM IST

சென்னை :   டிஎன்பிஎஸ்சி குரூப் 5 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.


குரூப் 5ஏ தேர்வில் மூலம் அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பணிக்காக காலியாக உள்ள 35 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம். இது குறித்த விபரங்கள் இதோ...




காலி பணியிடங்கள் - 35 அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பணியிடங்கள்


கல்வி தகுதி - 1. அரசு அல்லது யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2. தமிழ்நாடு அமைச்சுப் பணியில் உதவியாளராகவோ அல்லது நீதித்துறை பணியில் ஒரு உதவியாளராகவோ பணியாற்றியிருக்க வேண்டும்.


வயது வரம்பு - அதிகபட்ச வயது 35 


ஊதிய  விபரம் - இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Scale Level 16 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை - எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை - தகுதியான விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி.,யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்